சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
சேமிப்பு -ஆபத்தான சுகயீனங்களுக்கான பாதுகாப்பு
அதிகபட்ச முதிர்வு வயது
வழங்கப்படும் வயதெல்லை
நீங்கள் இதனை எங்கு கொள்வனவு செய்யலாம்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கனவுகள் இருப்பதை நாம் அறிவோம், எனினும் அவற்றை நனவாக்கத் தேவையான வழி முறையைக் கண்டறிந்து விட்டீர்களா? பல்வேறு காப்புறுதி அனுகூலங்களைக் கொண்டுள்ள சேமிப்புத் திட்டமான AIA Savings Plus Gold இனை உங்களினதும் உங்கள் அன்பிற்குரியவர்களினதும் ஆபத்தான சுகயீனம், வைத்தியசாலை அனுமதி, சத்திரசிகிச்சை மற்றும் இன்னும் பல தேவைகளின் போதான பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்துகின்றோம்.
பணவீக்கப் பாதுகாப்பு - உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பொருந்தும் ஆயுள் காப்புறுதி
வசதியான பணி ஓய்விற்கு நீங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த தேவையான பாதுகாப்புப் பெறுமதியை தெரிவு செய்யும் விருப்பினை AIA Savings Plus Gold உங்களுக்கு வழங்குகின்றது.
உங்களினது பணி ஓய்வு வாழ்க்கையை ஆபத்தான சுகயீனமொன்று பாதிப்புக்குள்ளாக்குவதை அனுமதிக்க வேண்டாம். பட்டியலிடப்பட்ட 22 பாரதூரமான நோய்களுக்கான நிதியுதவியை நாம் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் வழங்குகின்றோம்.
நிதிப் பொறுப்புக்கள் கடினமானவை என்பதை அறிவோம். ஆகவே, 10வது காப்புறுதி ஆண்டு பூர்த்தியின் போது சகல கட்டுப்பணத் தவணைகளும் முறையாக செலுத்தப்பட்டிருப்பின் உங்களின் வருடாந்த அடிப்படைக் கட்டுப்பணத்தினைப் போன்ற 200% த்திற்கு சமனான தொகையை விசுவாச வெகுமதியாக நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.
“ஆபத்தான சுகயீனப் பாதுகாப்பு” என்பதால் நாங்கள் கருதுவது என்ன?
புற்றுநோய் போன்ற ஆபத்தான சுகயீனங்கள் எதிர்பாராமல் ஏற்பட்டால் AIA உங்களுக்கு பண நஷ்ட ஈடு வழங்கி உங்களின் பாரிய மருந்துச் செலவினச் சுமையைக் குறைக்கும். அத்துடன் நீங்கள் சிரமங்களை எதிர் கொள்ளத் துணை நிற்கும்.
உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் காப்பீட்டை திருத்தியமைக்கக்கூடிய மேலதிக தெரிவுகள் காணப்படுகின்றன.
விபத்துக் காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்துக் காரணமாக உங்களால் தொழில் புரிய இயலாமல் போனால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான நிதிப் பாதுகாப்பினை வழங்கி அவர்களின் வாழ்க்கை முறை பராமரிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.
03 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நேரிட்டால் நாளாந்தப் பணக்கொடுப்பனவாக ரூபா.10,000 வரையான அனுகூலத்தைப் பெறுவீர்கள் (முதலாவது தினம் தொடக்கம்). அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அத்தொகை இரு மடங்காகும். இக்காப்புறுதியை உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொள்ள முடியும்.
இக்காப்புறுதியின் கீழ் நீங்களும் உங்களின் அன்பிற்குரியவர்களும், இலங்கையில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் சத்திரசிகிச்சை தொடக்கம் வெளிநோயாளர் பிரிவில் அல்லது நாளாந்த செயற்பாடுகளில் சிகிச்சை பெறும் போது ஏற்படும் மருத்துவச் செலவீனத்தினை மீள் கோர முடியும்.
நீங்கள் முழுமையாகவும் மற்றும் நிரந்தரமாகவும் அங்கவீனம் அடைந்தால், உங்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்துவதை நாம் தொடர்ந்து உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இக்காப்புறுதியின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். இக்காப்பீட்டை உங்கள் வாழ்க்கைத் துணைக்காகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
திடீர் மரணம் அல்லது தொழில் புரிய இயலாத அங்கவீன நிலை உங்களுக்கு ஏற்பட்டால், உங்களுடைய குடும்பத்திற்கு நிலையான மாதாந்த வருமானம் ஒன்றை வழங்குவோம். (காப்புறுதிக் காலத்தில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை)
உங்கள் காப்புறுதியின் ஊடாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்.
உங்கள் குழந்தைக்கு இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இக் காப்புறுதியின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். உங்களின் பிள்ளை 12 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர்களுடன் தங்கியிருப்பதற்கும் கொடுப்பனவொன்றை உங்களுக்கு வழங்குகின்றோம்.
ஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவர்(ஆயுள் காப்புறுதிதாரர்) காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதித் திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும், அதேவேளை காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கே ஏற்புடையதாக இருக்கும். இப்பக்கமானது இத்திட்டத்தின் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமே, இக்காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களைத் தெரிந்து கொள்ள தயவு செய்து காப்புறுதித் திட்ட ஆவணத்தைப் பார்க்கவும்.
நீங்கள் இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நாளில் இருந்து (14) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக இக்காப்புறுதித் திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்யலாம். அதன் பின்னர் நாங்கள் உங்கள் காப்புறுதித் திட்டத்துடன் தொடர்புடைய செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடாக உங்களுடைய கட்டுப்பணங்களை உங்களிடம் திருப்பிச் செலுத்துவோம்.
ஆயுள் காப்புறுதிதாரர் முதலாவது காப்புறுதி வருடத்தின் போதோ அல்லது மீள்நிறுவலின் போதோ தற்கொலை செய்து கொண்டால் (அச்சமயத்தில் சித்தசுவாதீனம் அற்றவராகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ);
• நாங்கள், நீங்கள் செலுத்திய கட்டுப்பணங்களை உங்களது காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பிற்பாடு உங்களுக்குச் செலுத்துவோம்; அல்லது
• காப்புறுதித் திட்டமானது 3ம் நபருக்கு மாற்றப்படும் போது, காப்புறுதித் திட்டத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை மீட்பதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை என்பதை 3ம் நபர் நிரூபிக்கும் பட்சத்தில் அவருக்கு நாங்கள் கொடுப்பனவைச் செலுத்துவோம் (காப்புறுதிதாரர் இறக்கும் போது வேறு ஏதேனும் வகையில் செலுத்தப்படக் கூடியதான தொகையை விட அதிகமாக இருத்தல் ஆகாது)
ஏதேனும் போர், ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு, படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள், சிவில் யுத்தம், படைக்கலகம், கலவரம், வேலை நிறுத்தம், மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை, இராணுவப் புரட்சி, கிளர்ச்சி, கலகம், இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்பு, அரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதை பயங்கரவாதம் அல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்குப் பாதிப்பளிக்கும் வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஒர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாக செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல்; ஆகியற்றில் ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றால் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள் காப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே கையளிப்புப் பெறுமதியை நாங்கள் செலுத்துவோம்.
மரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணமானது மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டுக்குறி (AIDS) ஆகவோ மனித நோயெதிர்த்திறனழித் தீநுண்மம் (HIV) ஆகவோ இருந்தால் நாங்கள் உங்களது மரணத்திற்கான அறிவித்தலைப் பெறும் திகதியில் அது நடைபெற்றதாக இருந்தால் மட்டுமே முதலீட்டுக் கணக்கின் மீதியை நாங்கள் செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி வருடங்களின் போது உங்களினுடைய கட்டுப்பணங்களை இறுதித் திகதியில் செலுத்த மாட்டீர்கள் எனில் நீங்கள் மேலதிகமாக முப்பது (30) நாட்கள் கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்காகப் பெறுவீர்கள்.
காப்புறுதி ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு மேலதிக சுகாதார அனுகூலங்களை அனுபவிப்பதற்காக 3 மாதங்கள் தாமதிப்புக் காலமாக இருக்கும். அன்ஜியோபிலாஸ்டி அனுகூலத்திற்காக இக்காலம் 12 மாதங்களாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால்; பிரகடனப்படுத்தப்படும்; ஒரு குறிப்பிட்ட ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச்செய்வதற்கு அடிப்படையாக அமையும். கடந்த ஆண்டுக்கு பொருந்தக்கூடிய வருடாந்த பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் முதல் ஆறு (6) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும். குறிப்பிட்ட வருடத்திற்குரிய ‘வருடாந்த பங்குலாப வீதம்’ அறிவிக்கப்படும் வரை, ‘உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருடாந்த பங்குலாப வீதம்’ முதலீட்டுக் கணக்கின் அடிப்படையிலான எந்த அனுகூலத் தொகையையும் கணக்கிடுவதற்குரிய அடிப்படையாகப் பயன்படுத்தப்படும். அடுத்த ஆண்டுக்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதமானது நடப்பு ஆண்டின் இறுதி மூன்று (3) மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும்.
உங்களினுடைய காப்புறுதியானது கையளிப்புப் பெறுமதியை அடைந்ததன் பிற்பாடு முதலீட்டுக் கணக்கின் மீதியில் இருந்து உங்களால் 15%வரை எடுக்க முடியும்.